உயிரை தமிழ் திரை உலகிற்கு தந்தாய்
உடலை மருத்துவத்திற்கு தந்தாய்!
உயர்ந்த உள்ளமே
உன் பின்னால் மக்கள் வெள்ளமே!
தமிழர்களின் உயிர் எழுத்தே!
இந்தியர்களின் மெய் எழுத்தே!
உலக கலைகளின் உயிர்மெய் எழுத்தே!
நீ தினம் தினம் மாற்றுகிறாய் உருவத்தை!
வியந்து நாங்கள் உயர்த்துகிறோம் புருவத்தை!
எண்ணிலடங்கா கமல் ரசிகர்களின் எண்ணிக்கை
ரத்த தானம் செய்வது உங்கள் அன்பிற்கு சிறிய காணிக்கை!
தாய் மொழி தமிழ் எனினும்,
உயிர் மொழி கமல் அன்றோ?
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்!
ராஜனுக்கு ராஜன் எங்கள் கமல்ஹாசர் தான்!
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தையாக நீ நிகழ்த்தியது பரவசம்,
நடிப்பில் மைல்கல்லை பதித்தது உன் ஒப்பில்லா நவரசம்!
தமிழகத்தின் ஆனந்த ஜோதியே
உனக்கில்லை மதமும் ஜாதியே!
உலக நாயகனின் நடிப்பை பாரும்
அவரை பார்த்தாலே பசி தீரும்!
நம்ம கமல் அண்ணாச்சி
கன்னிகளின் மனதில் பறக்கும் பட்டாம்பூச்சி!
நீயே எங்கள் குரு
கலைத்தாயின் தலை சிறந்த கரு!
நீ விட்டாய் சவால்
அதில் அனைவரும் திவால்!
சட்டம் உன் கையில்,
விருதுகள் என்றும் உன் பையில்!
பலதுறைகளில் நீர் சகலகலாவல்லவன் ஆயினும்
பாமரன் போற்றும் நல்லவன்!
கலை வானில் என்றும் நீங்கள் மூன்றாம் பிறை!
நீ வாழும் வரை எங்களுக்கு ஏது குறை?
புகழ்ச்சி வேண்டாம் என ஒதுக்கினாய்
தூங்காதே தம்பி தூங்காதே என்று எங்களை எழுப்பினாய்!
சுதந்திர போராட்டத்தில் உன் தந்தை அணிந்தது காதர் சட்டை!
காவல் துறையை கண்ணியப்படுத்தியது உன் காக்கி சட்டை!
சராசரி முத்துக்களுக்கிடையே மின்னும் நீ
எங்கள் சிப்பிக்குள் முத்து!
ஆருயிர் அண்ணனே!
எழில் சிரிப்பு பூண்ட புன்னகை மன்னனே!
கன்னி தமிழ் காவலனே!
இளைஞர்களுக்கு வழிகாட்டும் நாயகனே!
மதங்களை மறப்போம்!
அபூர்வ சகோதரர் வழி நடப்போம்!
முத்தமிழ் கடவுளுக்கு மறு பெயர் வேலன்
பரமக்குடி பைந்தமிழனோ எங்கள் சிங்கர வேலன்!
பராசக்தியில் அசத்தியது கலைஞர்
ஜனசக்தியில் அசத்தியது எங்கள் கலைஞன்!
மூட நம்பிக்கையை திணிப்பது விதி!
அதை பகுத்தறிவுடன் வென்றார் மகாநதி!
உலக தமிழர்கள் போற்றும் தென்னவரே!
சமூக தொண்டில் எங்களை ஈடுபடுத்திய நம்மவரே!
பழைய மரபுகள் என்றளவில் கலாவதி!
மகளிர் விடுதலையை உணர்த்தியது சதி லீலாவதி!
தீண்டாமைக்கு எதிரான அனலே!
கலைக்காக ஈன்றாய் குருதி புனலே!
மனித இனத்திற்குள் மோதலா? மோதலா?
தீர்வு கண்டு விட்டார் எங்கள் காதலா காதலா!
அன்னல் காந்தி இறுதியாக கூறிய சொல்
இந்திய சினிமா வரலாற்றின் ஆரம்ப சொல்
இரண்டுமே "ஹே ராம்" தான்!
வயிறு குலுங்க சிரிக்க வைப்பார் தெனாலி,
அவர் வழியை பின்பற்றாவிடில் நீ ஏமாளி!
உலக கலைகளை ஆளவந்தானே!
தமிழ் நட்சத்திரங்களுக்கு வாழ்வு தந்தானே!
அறிவு நுணுக்கத்திற்கு ஒரு பஞ்ச தந்திரம்!
ஆக மொத்தம் கமலே எங்கள் தாரக மந்திரம்!
பம்மல் கே சம்பந்தமே! 50 ஆண்டுகளாக
மக்களுக்கு தருகிறாய் பேரானந்தமே!
வீரமிகு விருமாண்டி! தமிழ் திரைக்கு
கௌரவத்தை தருவாண்டி!
வர்த்தக துறையில் நீ என்றும் வசூல் ராஜா!
நீ விரும்ப மாட்டாய் அரசியல் கூஜா!
என்றும் நீ தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
மும்பைக்கு கலைகளை சொல்லித்தரும் மும்பை எக்ஸ்பிரஸ்!
பண்பாடுகளில் சிறந்தது தமிழ் பண்பாடு
தமிழ் சினிமாவில் நீ வேட்டையாடு விளையாடு
கடவுள் தெரிஞ்சதெல்லாம் அவதாரம்
இறைவனையே தோற்கடித்தது உன் தசாவதாரம்!
எனக்குள் ஒருவன் நீ!
அனால் உன்னை போல் ஒருவனும் இல்லை!
No comments:
Post a Comment